கிருஷ்ணராயபுரம் அரசு பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

2 months ago 9

 

கிருஷ்ணராயபுரம், நவ. 16: கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவிகளிடையே போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கரூர் மாவட்டம் கிருஷ் ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவிகளிடம் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

மேலும் புகையிலை மற்றும் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினார். இதில் மாணவர்கள் தங்களின் பெற்றோர்கள் போதைப் பொருள் பயன்படுத்தினால் நீங்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post கிருஷ்ணராயபுரம் அரசு பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article