கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு: தனியார் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீன் மனு மீது அக்.14-ல் ஐகோர்ட் தீர்ப்பு

8 months ago 52

சென்னை: கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கில் தனியார் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீன் மனு மீது வரும் அக்.14 அன்று தீர்ப்பளிக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கிருஷ்ணகிரியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் கைதான தனியார் பள்ளி தாளாளர் சாம்சன் வெஸ்லி (52), தலைமை ஆசிரியர் சதீஷ்குமார் (40), ஆசிரியை மார்கரேட் ஜெனிபர் (35) உள்பட 6 பேர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

Read Entire Article