கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

2 months ago 8

கிருஷ்ணகிரி, நவ.15: கிருஷ்ணகிரி கனிம வளத்துறை உதவி இயக்குனர் சரவணன் மற்றும் அதிகாரிகள், பர்கூர் ஜெகதேவி கூட்ரோட்டில், நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற லாரியில் சோதனை மேற்கொண்டனர். அதில், செந்தாரப்பள்ளியில் இருந்து ஜெகதேவிக்கு ₹90ஆயிரம் மதிப்பிலான கிரானைட் கற்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து கற்களுடன் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை பர்கூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, லாரியின் உரிமையாளர் மற்றும் டிரைவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article