ரம்பன்: ஜம்மு காஷ்மீரில் திடீர் மேகவெடிப்பால் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரிர் ரம்பன் மாவட்டத்தில் செனாப் ஆற்றையொட்டி தரம் குந்த் கிராமம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட மேக வெடிப்பால் திடீரென்று கனமழை பெய்தது. இதனால் அந்த கிராமம் முழுவதும் வௌ்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்து வௌ்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் வௌ்ள நீரில் அடித்து செல்லப்பட்டன. நஷ்ரி – பனிஹால் இடையே 10க்கும் மேற்பட்ட இடங்கில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகளை மண் மூடி உள்ளதால் ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை, நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 3 பேர் பலியாகி விட்டனர்.
காவல்துறையினரின் துரித நடவடிக்ககைளால் 100 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஜம்மு துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதல்வர் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என முதல்வர் உமர் அப்துல்லா உறுதி அளித்துள்ளார்.
The post காஷ்மீரில் மேக வெடிப்பால் கனமழை, நிலச்சரிவு: 3 பேர் பலி, 100 பேர் மீட்பு appeared first on Dinakaran.