காஷ்மீரில் அமைதியை கெடுக்க சதி: ரஜினிகாந்த் பேட்டி

7 hours ago 3

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கேரளா மற்றும் கோவை சுற்றுப்புற பகுதிகளில் நடந்த படப்பிடிப்புகளில் கடந்த 15 தினங்களாக பங்கேற்றார். படப்பிடிப்பு முடிந்த பின் கோவையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு சென்னை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காஷ்மீரில் தீவிரவாத செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. காஷ்மீரில் அமைதி இயற்கையாக திரும்பி இருப்பது, எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. அதை கெடுக்க வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறார்கள். இதை செய்தவர்களுக்கும், அதன் பின்னால் இருப்பவர்களையும் கண்டுபிடித்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

The post காஷ்மீரில் அமைதியை கெடுக்க சதி: ரஜினிகாந்த் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article