காஷ்மீரில் 8 பேர் சுட்டுக்கொலை: மேலும் 3 பேர் படுகாயம் தீவிரவாதிகள் வெறிச்செயல்

3 months ago 14

ஸ்ரீநகர்: காஷ்மீரில் கட்டுமான பணியில் ஈடுபட்ட மருத்துவர் மற்றும் 7 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 3 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜம்மு – காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்திற்கு உட்பட்ட ககாங்கிர் பகுதியில் வெளி மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சுரங்கப்பாதை உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் அப்பகுதியில் தற்கால குடிசை அமைத்து கட்டுமான பணிகளை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் குடியிருப்புகள் நுழைந்த தீவிரவாதிகள் அவர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் மருத்துவர் மற்றும் 7 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும் மூன்று பேர் பலத்த காயமடைந்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீவிரவாதிகளை பிடிக்க ராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.

The post காஷ்மீரில் 8 பேர் சுட்டுக்கொலை: மேலும் 3 பேர் படுகாயம் தீவிரவாதிகள் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Read Entire Article