காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரைக்கு கரூரில் வரவேற்பு - நாளை காவிரிக்கு மகா ஆரத்தி

4 months ago 18

கரூர்: கரூரில் காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, வழிபாடு நடைபெற்றது. நாளை (நவ. 4ம் தேதி) காவிரி அம்மன் நகர்வலம் மற்றும் அதனை தொடர்ந்து நெரூரில் காவிரி மகா ஆரத்தி பெருவிழா நடைபெறுகிறது.

அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம், அன்னை காவிரி நதி நீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் காவிரி நதியை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 14 ஆண்டுளாக அன்னை காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

Read Entire Article