காவல் நிலையங்களில் வீணாகும் வாகனங்கள்

1 month ago 6

 

திண்டுக்கல், மார்ச் 24: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் கடந்த பல ஆண்டுகளாக திருட்டு, விபத்து மற்றும் சட்டவிரோத பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் வாகனங்கள், ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலைய வளாகங்கள் மற்றும் திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் துருப்பிடித்து வீணாகி வருகின்றன. இதனால், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இதுதவிர சில இடங்களில் வாகனங்களில் உள்ள உதிரி பாகங்கள் சமூக விரோதிகளால் திருடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பறிமுதல் வாகனங்களில் செடி, கொடிகள் வளர்ந்து அதிலிருந்து அருகில் உள்ள கட்டிடங்களுக்குள் விஷ பூச்சிகள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. எனவே, அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காவல் நிலையங்களில் வீணாகும் வாகனங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article