சிவகங்கை: “காவல் துறையை கூலிப்படையாக மாற்றியுள்ளனர்” என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டினார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸார் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரை இன்று (ஜூலை 3) சந்தித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.