காலாண்டு விடுமுறையால் குமரியில் சூரிய உதயம் காண பெற்றோருடன் குவிந்த குழந்தைகள்

5 months ago 44

நாகர்கோவில்: பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டு்ளளதை தொடர்ந்து கன்னியாகுமரி சுற்றுலா மையங்களில் பெற்றோர்களுடன் பள்ளிக் குழந்தைகள் அதிகமானோர் குவிந்தனர். அதிகாலையில் சூரிய உதயத்தை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் வாரவிடுமுறை இறுதி நாட்கள், பண்டிகை நாட்கள், கோடை விடுமுறை, மற்றும் அரசு விடுமுறை நாட்களில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, மற்றும் பிற மாநிலங்களில் இருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் கூடுவர். தமிழகத்தில் பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிந்து வருகிற அக்டோபர் 7-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article