சென்னை: காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப நம்மை தக்கவைத்துக் கொள்ளும் நடவடிக்கையை எடுத்து வருகிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் 2-வது ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது; வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் காலநிலை மாற்றம் தொடர்பாக தமிழ்நாட்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.500 கோடியில் 5,000 சிறிய நீர் பாசனங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.
The post காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப நம்மை தக்கவைத்துக் கொள்ளும் நடவடிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.