கார்த்திகை மாத பிறப்பையொட்டி உழவர் சந்தைகளில் 75.95 டன் காய்கறி ரூ.27.78 லட்சத்திற்கு விற்பனையானது

7 months ago 22

 

ஈரோடு, நவ. 18: ஈரோடு மாவட்ட உழவர் சந்தைகளுக்கு வரத்தான 75.95 டன் காய்கறிகள் ரூ.27.78 லட்சத்திற்கு விற்பனையானது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கார்த்திகை மாத பிறப்பையொட்டி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க துவங்கியதால், காய்கறிகளின் நுகர்வு அதிகமாக இருக்கும் என்பதால், விடுமுறை தினமான நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளிலும் விவசாயிகள் அதிகளவில் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

காய்கறிகளை வாங்கவும் மக்கள் கூட்டம் காலை முதலே அலைமோதியது. இதில், ஈரோடு மாநகரில் உள்ள சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான 31.24 டன் காய்கறிகள் ரூ.11 லட்சத்து 42 ஆயிரத்து 749க்கு விற்பனையானது. இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள உழவர் சந்தைகளுக்கும் மொத்தம் வரத்தான 75.95 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ.27 லட்சத்து 78 ஆயிரத்து 450க்கு விற்பனையானதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

The post கார்த்திகை மாத பிறப்பையொட்டி உழவர் சந்தைகளில் 75.95 டன் காய்கறி ரூ.27.78 லட்சத்திற்கு விற்பனையானது appeared first on Dinakaran.

Read Entire Article