கார்-சரக்கு வேன் மோதல் ஒரே குடும்பத்தில் 4 பேர் பரிதாப பலி: சென்னையை சேர்ந்தவர்கள்

5 hours ago 1

வல்லம்: சென்னை பெருங்களத்தூர் விஷ்ணுநகர் பகுதியை சேர்ந்தவர் குமார்(57). இவர், மனைவி ஜெயா(55), மகள்கள் துர்கா(32), மோனிஷா(30) மற்றும் ஐடி கம்பெனியில் பணியாற்றும் மருமகன் ஸ்டாலின்(36), பேத்தி இதழனி தூரிகா(3) ஆகியோருடன் ஆன்மிக சுற்றுலா புறப்பட்டார். நேற்று காலை கும்பகோணம் கோயில்களில் சாமி தரிசனம் செய்து விட்டு, தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு காரில் சென்றனர். காரை மருமகன் ஸ்டாலின் ஓட்டி சென்றுள்ளார். கும்பகோணம் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது தஞ்சாவூர் அருகே உதாரமங்கலம் பகுதியில் இருந்து நாற்றுக்களை ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு வேன், கார் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், இரும்பு தடுப்பு பேரிகார்டில் மோதியது. இதில் ஜெயா சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து தாலுகா போலீசார் வந்து காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே குமார், ஸ்டாலின் மனைவி துர்கா, இதழனி தூரிகா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். மோனிஷா, ஸ்டாலின் மற்றும் சரக்கு வேன் டிரைவர் விக்னேஷ்(35) வேனில் வந்த கொடிக்காலுரை சேர்ந்த இளங்கோ(51) ஆகியோர் படுகாயத்துடன் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து தஞ்சாவூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post கார்-சரக்கு வேன் மோதல் ஒரே குடும்பத்தில் 4 பேர் பரிதாப பலி: சென்னையை சேர்ந்தவர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article