காரியாபட்டி, ஜூன் 4: காரியாபட்டி பேரூராட்சியில் வீடுகள்தோறும் அம்ரூத் திட்டத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்களுக்கு மீட்டர் பொருத்தும் பணி துவங்கியுள்ளது. காரியாபட்டி பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின் மூலம் அனைத்து வார்டுகளிலும் உள்ள வீடுகளுக்கு குடிநீர் சீராக விநியோகம் செய்வதற்கு புதிய குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. இந்த புதிய குழாய்கள் மூலம் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் புதிய குடிநீர் இணைப்புகளுக்கு மாதந்தோறும் அரசு நிர்ணயித்த கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி குடிநீர் குழாய்களுக்கு மீட்டர் பொருத்தும் பணி துவங்கியுள்ளது. மீட்டர் பொருத்தும் பணியை பேரூராட்சி தலைவர் செந்தில், செயல் அலுவலர் முருகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
The post காரியாபட்டி பேரூராட்சியில் குடிநீர் குழாய்க்கு மீட்டர் பொருத்தும் பணி துவக்கம் appeared first on Dinakaran.