கோவை, ஜன. 14: கோவையில் காரின் மீது நின்று வீட்டை சுத்தம் செய்தபோது தவறி விழுந்து மூதாட்டி பலியானார். கோவை ஈச்சனாரியை சேர்ந்தவர் தமிழ்செல்வி (60). இவர் நேற்று முன்தினம் பொங்கலையொட்டி வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது வீட்டின் முன் பகுதியை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரின் மீது ஏறி சுத்தம் செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தார். அவரின் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர் ஓடி வந்து பலத்த காயம் அடைந்த தமிழ் செல்வியை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post காரின் மீது இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி appeared first on Dinakaran.