காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராமசபை கூட்டம்

2 hours ago 2

சென்னை: ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பா.பொன்னையா, மாவட்ட ஆட்சியர்களுக்கு, அனுப்பியுள்ள கடிதத் தில் கூறியிருப்பதாவது: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்.2-ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

இக்கூட்டத்தில், கிராம ஊராட்சிகளில் கடந்த ஏப்.1 முதல் செப்.30வரையுள்ள காலத்தில் ஊராட்சியின் பொது நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கை படிவத்தை படித்து ஒப்புதல் பெற வேண்டும். கிராம ஊராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறவேண்டும். தூய்மையான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்க வேண்டும்.

Read Entire Article