காந்தி ஜெயந்தி அன்று டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: கலெக்டர் உத்தரவு

6 months ago 37

 

காஞ்சிபுரம், செப். 30: தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981ன் படி அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் கீழ்கண்ட நாளில் நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்ற அரசின் அறிவிப்பினை தொடர்ந்து.

வரும் 2.10.2024 (புதன் கிழமை) காந்தி ஜெயந்தி தினமாகும். எனவே, மேற்படி நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் (பார்) ஆகியற்றை நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டுமென காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

The post காந்தி ஜெயந்தி அன்று டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article