காதலன், தாயுடன் சேர்ந்து தந்தையை கொன்ற மகள் கைது..!!

5 hours ago 3

ஐதராபாத்தில் காதலன், தாயுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மனிஷா (25), தாயார் சாரதா (40), காதலன் ஜாவீத் ஆகியோரை கைதுசெய்து போலீசார் சிறையில் அடைத்தனர். மனிஷாவுக்கு திருமணமான நிலையில் வேறு ஒருவருடன் தொடர்பிருப்பதை தட்டிக் கேட்ட தந்தை கொலை செய்யப்பட்டார். தந்தை லிங்கத்தை கொலை செய்த மனிஷா, அவரது உடலை எடுலாபாத்தில் குளத்தில் வீசியுள்ளார். தந்தையை கொலை செய்துவிட்டு காதலனுடன் மேட்னி ஷோ திரைப்படத்துக்கு சென்ற மனிஷாவால் பரபரப்பு ஏற்பட்டது.

The post காதலன், தாயுடன் சேர்ந்து தந்தையை கொன்ற மகள் கைது..!! appeared first on Dinakaran.

Read Entire Article