
சென்னை,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சையளித்து வந்தனர்.
இந்த சூழலில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலை மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதன்படி சென்னை மியாட் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலமானார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனது மகன் திருமகன் ஈ.வே.ரா. காலமானதை தொடர்ந்து, இடைத்தேர்தலில் வெற்றிபெற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.