காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியாகாந்தி உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம் தகவல்

5 hours ago 2

டெல்லி: சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி (78) உடல்நல குறைவால் கடந்த 15ம் தேதி டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயிறு தொடர்பான பிரச்சினை அவருக்கு இருந்தது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் உடல்நிலை சீரானதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் சில தினங்களுக்கு முன் வீடு திரும்பினார்.

இந்நிலையில் 17ம் தேதி அவருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து காலை 10 மணியளவில் அவர் சர் கங்கா ராம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதாகவும், சோனியா காந்தி குணமடைந்து வருவதாகவும், அவரது உடல்நிலை உன்னிப்பாக கவனிக்கப்படுவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சர் கங்கா ராம் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்; சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக முன்னேறி வரும் நிலையில், மருத்துவமனை இன்னும் டிஸ்சார்ஜ் தேதியை முடிவு செய்யவில்லை. அவர் குணமடைந்ததை பொறுத்து டிஸ்சார்ஜ் குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவுக்கு சமீபத்தில் சென்ற அவர் உயர் ரத்த அழுத்தம் காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியாகாந்தி உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article