‘கவனிப்பு மழை’யில் கிளைக் கழகச் செயலாளர்கள் - அதிரடியாய் ஆட்டத்தைத் தொடங்கிய அண்ணாச்சி!

2 days ago 4

தீபாவளி, பொங்கல் என்றால் ஒருசில திமுக மாவட்டச் செயலாளர்கள் கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு அன்பளிப்பு கொடுத்து அசத்துவார்கள். அதுவும் ஆளும் கட்சியாக இருந்துவிட்டால் இந்தக் ‘கவனிப்பு’ கொஞ்சம் தாராளமாகவே இருக்கும். ஆனால், இப்போது தீபாவளியும் இல்லை... பொங்கலும் இல்லை. ஆனலும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் உள்ள கிளைக் கழக நிர்வாகிகள் தொடங்கி அத்தனை பேருக்கும் ரூபாய் ஐயாயிரத்தில் தொடங்கி அன்பளிப்புகளை தந்து அசத்திக் கொண்டிருக்கிறார் விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் அண்ணாச்சி.

2021 தேர்​தலில் விருதுநகர் மாவட்​டத்​தில் ஸ்ரீவில்​லிபுத்​தூர் தொகு​தி​யைத் தவிர்த்து மற்ற 6 தொகு​தி​களை​யும் திமுக கூட்​டணி கைப்​பற்​றியது. ஸ்ரீவில்​லிபுத்​தூர் தொகு​தி​யில் போட்​டி​யிட்ட காங்​கிரஸ் வேட்​பாளர் வாக்​குப் பதிவுக்கு சில தினங்​களுக்கு முன்​ன​தாக திடீரென கால​மான நிலை​யில், அந்​தத் தொகு​தியை அதி​முக கைப்​பற்​றியது. இந்​தத் தொகு​தி​யில் அதி​முக வென்​றது அண்​ணாச்​சி​யின் அரசி​யல் சாணக்​கி​யத்​துக்கே சவாலாக அமைந்​தது.

Read Entire Article