திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே பரியாரம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (51). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மினி நம்பியார் (42). கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராதாகிருஷ்ணன் புதிதாக கட்டி வரும் தன்னுடைய வீட்டுக்கு அருகே வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். பரியாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் ராதாகிருஷ்ணனின் மனைவி மினி நம்பியாருக்கும், அதே பகுதியை சேர்ந்த சந்தோஷுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.
2 பேரும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளி பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட 2 பேருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த ராதாகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொல்ல மினி நம்பியார் சதித் திட்டம் தீட்டினார்.அதன்படி சந்தோஷ் தனது நண்பரான சிஜோ ஜோசப் என்பவரிடமிருந்து துப்பாக்கியை வாங்கி ராதாகிருஷ்ணனை சுட்டுக் கொன்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன் சந்தோஷையும், சிஜோ ஜோசப்பையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் தான் கொலைக்கு சதித் திட்டம் தீட்டியதில் ராதாகிருஷ்ணனின் மனைவி மினி நம்பியாருக்கும் பங்கு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மினி நம்பியாரை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு அவரை போலீசார் கண்ணூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை சுட்டுக்கொன்ற மனைவி கைது appeared first on Dinakaran.