கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

4 hours ago 1

சென்னை,

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 93.80 சதவீதம் பேரும், பிளஸ்-1 தேர்வில் 92.09 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில், தேர்வு முடிவுகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

10 மற்றும் 11-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், உங்கள் கல்லூரி இலக்குக்குத் தேவையான பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள். 11-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், இன்னும் அதிக மதிப்பெண்களைப் பெற்று 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற வாழ்த்துகள்.

இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்தடுத்த தேர்வுகள் உள்ளன; அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தேர்ச்சி பெறுங்கள். கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article