கல்வி கடன் வழங்க லஞ்சம்: வங்கி ஊழியருக்கு 4 ஆண்டு சிறை

6 hours ago 3

கல்வி கடன் வழங்க லஞ்சம் பெற்ற வங்கி ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி நாசரேத் கனரா வங்கி கிளையில் முதுநிலை மேலாளராகப் பணிபுரிந்தவர் சாமுவேல் ஜெபராஜ். இதே வங்கியில் தற்காலிகப் பணியாளராக பணிபுரிந்தவர் நாராயணன் (63). இப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகள் நர்சிங் படிப்பில் சேர கல்விக் கடன் கேட்டு 2010-ல் விண்ணப்பித்தார். கல்வி கடனுக்கான வரைவு காசோலை வழங்க சாமுவேல் ஜெபராஜ், நாராயணன் ஆகியோர் ரூ.8 ஆயிரம் லஞ்சம் பெற்றுள்ளனர். இது தொடர்பான புகாரின்பேரில், சிபிஐ வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தது.

Read Entire Article