மதுரை: மதுரையில் பொறியியல் கல்லூரி நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற தமிழக ஆளுநர் மாணவர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்த நிலையில், அவர் பதவி விலகவேண்டும் என, மூட்டா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் கல்வி கூடங்களில் கம்பர் எனும் தலைப்பில் நடந்த மாநில பேச்சுபோட்டிக்கான பரிசு விழா நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்என். ரவி, மாணவர்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தமிழக ஆளுநரின் சர்ச்சை பேச்சுக்கு மூட்டா அமைப்பின் பொதுச்செயலாளர் செந்தாமரைகண்ணன், தலைவர் பெரியசாமி ராஜா ஆகியோர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.