கல்லூரிகளில் ​ராகிங் கொடுமையை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்

19 hours ago 4

தஞ்​சாவூர்: தமிழக உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன், தஞ்​சாவூரில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: தஞ்​சாவூரில் வரும் 15-ம் தேதி பொது​மக்​கள் மற்​றும் கட்சி நிர்​வாகி​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சந்​தித்​துப் பேசுகிறார். தொடர்ந்​து, கருணாநிதி சிலை​யைத் திறந்து வைக்​கிறார். வரும் 16-ம் தேதி சரபோஜி அரசுக்கல்​லூரி மைதானத்​தில் நடை​பெறும் விழா​வில் 1.5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பயனாளி​களுக்கு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கு​கிறார்.

மேட்​டூர் அணை​யில் முதல்​வர் தண்​ணீர் திறந்​து​விட்​டுள்ள நிலை​யில், டெல்டா மாவட்​டங்​களில் விதை நெல், இடு​பொருட்​கள் ஆகியவை மானிய விலை​யில் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. அவை தட்​டு​ப்பாடின்​றிக் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல, கடைமடை வரை தண்​ணீர் செல்​ல​வும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. கல்​லணை​யில் இருந்து தண்​ணீர் திறக்​கப்​படு​வதற்​கான தேதியை அரசு அறிவிக்​கும்.

Read Entire Article