கல்லாறு தோட்டக்கலைத்துறை பண்ணையில் மனித நடமாட்டம் இருக்கக்கூடாது: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

2 months ago 11

சென்னை: யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் கல்லாறு தோட்டக்கலைப் பண்ணையில் மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை மனித நடமாட்டம் இல்லை என்பதை உறுதிபடுத்தும் விதமாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் யானைகள் வழித்தடமாகவும், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாகவும் உள்ள கல்லாறு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை பண்ணையைப் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், அந்தப் பண்ணையை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யக்கோரி கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Read Entire Article