கல்லணைக்கால்வாய் பாலத்தில் இரும்பு தடுப்புகள் அமைப்பு

1 day ago 4

தஞ்சாவூர்,

பூதலூர் ரெயில் நிலையம், பாரி காலனி, ஜெகன் மோகன் நகர் செல்லும் வழியில் உள்ள கல்லணைக்கால்வாய் பாலத்தின் மேல்பகுதியிலும், உள்பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து இருந்தது. இதனால் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதேபோல் கல்லணைக்கால்வாய் கரையில் கல்விராயன்பேட்டை அருகே பாலத்தின் தடுப்புச்சுவரில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி ஆற்றில் விழும் அபாயம் இருந்து வந்தது. இதை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த 23-ந்தேதி வெளியானது. இதன் எதிரொலியாக பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் கல்விராயன்பேட்டை கல்லணைக்கல்வாய் பாலத்தின் கரையை சீரமைத்து இரும்பு தடுப்பு அமைத்து அதில் ஒளிரும் சிவப்பு வில்லைகள் பொருத்தி உள்ளனர்.

இதேபோல் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பூதலூர் கல்லணைக்கால்வாய் பாலத்தின் உள்பகுதியில் மற்றும் மேல் பகுதியில் வளர்ந்திருந்த செடி கொடிகள் அகற்றப்பட்டு சீரமைத்தனர். இதை தொடா்ந்து உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Read Entire Article