
சென்னை,
''கல்கி 2898 ஏடி'' இல் நடித்தது தனது "பாக்கியம்" என்று அமிதாப் பச்சன் கூறினார், மேலும் மீண்டும் படத்தில் நடிக்க விரும்புவதாகவும் கூறினார்.
''கல்கி 2898 ஏடி'' திரைப்படம் வெளியாகி நேற்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்தது. நாக் அஷ்வின் எழுதி இயக்கிய, பான்-இந்திய பிளாக்பஸ்டரில் பிரபாஸ், தீபிகா படுகோனே , கமல்ஹாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இதில், அஸ்வத்தாமா கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்திருந்தார்.
கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், உலகளவில் ரூ. 1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, அதிக வசூல் செய்த இந்திய படங்களில் ஒன்றாக அமைந்தது.
தற்போது, படத்தின் 2-ம் பாகத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளன. படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.