கலைஞரின் பெருமைகளை உரக்க எடுத்து சொல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

2 weeks ago 9

சென்னை: கலைஞரின் பெருமைகளை உரக்க எடுத்துச் சொல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கலைஞர் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: எங்கும் எப்போதும் நிரந்தரமென நிறைந்திருப்பது கலைஞரின் பெருமைகளே! செம்மொழி நாளில் கலைஞர் வழியே தமிழினத்துக்கான கிழக்கு என உரக்க எடுத்துச் சொல்வோம்! வெல்வோம்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு: ‘‘தமிழ்ச்சமூகத்தின் இதயத்துடிப்பாய் இன்றும் வாழும் கலைஞரின் பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாடி அவர் புகழ் போற்றுவோம்.

2026லும் வென்று திமுக ஆட்சி தொடர உறுதியேற்போம்” திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி தனது எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது: அப்பா! ஆசான்! தலைவர்!‌ இதில் எந்த வார்த்தையை முதலில் சொல்லி அழைப்பது. பணிவும், இரக்கமும், அன்பும், புரட்சியும், தமிழும், அறமும், மனிதமும், அரசியலும் உங்களிடம் இருந்தே கற்றுக் கொண்டோம். நீங்கள் ஏற்றிய திராவிடத் தீயே எப்போதும் நெஞ்சினில் கனன்று எரிகிறது. தமிழ் போல் வாழ்க உன் புகழ்! இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post கலைஞரின் பெருமைகளை உரக்க எடுத்து சொல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Read Entire Article