கர்நாடகா எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு 2024 -ம் ஆண்டுக்கான வைக்கம் விருது: தமிழக அரசு

6 months ago 26

சென்னை: 2024-ம் ஆண்டுக்கான வைக்கம் விருது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தேவநூர மஹாதேவா-வுக்கு வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தேவநூர மஹாதேவா-வுக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் தமிழக முதல்வரால் வைக்கத்தில் நாளை (டிச.12) நடைபெற உள்ள நிகழ்ச்சியில் வழங்கப்படும், என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவையில், கடந்த 30.03.2023 அன்று எல்லை கடந்து சென்று சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய தந்தை பெரியாரை நினைவுகூறும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் “வைக்கம் விருது” சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ம் நாளன்று தமிழக அரசால் வழங்கப்படும் என்று 110-விதியின்கீழ் அறிவித்தார்.

Read Entire Article