கரூர் பஸ் நிலைய கழிவறையில் இயந்திரம் மூலம் துப்புரவு பணி

2 weeks ago 3

 

கரூர், ஜன.18: கரூர் மாநகராட்சி பஸ் நிலையத்தில் பொதுக் கழிவறையில் துப்புரவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கரூர் மாநகராட்சி குமாரசாமி பஸ் நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் சுதா உத்தரவின்பேரில் பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுக் கழிவறைகளில் தூய பணிகளை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பித்தார்.

இதன் அடிப்படையில் கரூர் பஸ் நிலையத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் பயன்படுத்தும் பொது கழிவறையில் தினசரி மூன்று முறை டிராக்டரில் நவீன இயந்திரம் பொருத்தப்பட்டு துப்புரவு பணி தீவிரமடைந்து வருகிறது.இதனால் கழிவறையில் சுத்தமாக சுத்தம் பேணப்படுவதுடன் பொதுமக்களின் சுகாதாரம் காக்கப்படுகிறது.நகராட்சியின் செயல்பாட்டுக்கு பொதுமக்கள் பாரா ட்டு தெரிவித்துள்ளனர்.

The post கரூர் பஸ் நிலைய கழிவறையில் இயந்திரம் மூலம் துப்புரவு பணி appeared first on Dinakaran.

Read Entire Article