கரூர் அருகே கண்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து

2 months ago 10

 

கரூர், நவ. 16: கரூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி புறப்பட்ட கண்டெய்னர் லாரி கரூர் அருகே சாலையில் கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் இருந்து ஒரு கண்டெய்னர் லாரி பேப்பர்களை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி நோக்கி புறப்பட்டது. நேற்று காலை கரூர் மதுரை பைபாஸ் சாலை காக்காவாடி அருகே லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, முன்னே சென்று கொண்டிருந்த மற்றொரு லாரியின் பின்புறம் எதிர்பாராதவிதமாக மோதிய கண்டெய்னர் லாரி, சாலையின் மையத்தில் கவிழ்ந்தது.

இதன் காரணமாக கரூரில் இருந்து மதுரை, திண்டுக்கல் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு சென்ற வாகனங்கள் அனைத்தும் வரிசை கட்டி நின்றன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சுமார் 2 மணி நேரம் போராடி பொக்லைன் இயந்திரம் மூலமாக கண்டெய்னர் லாரியை அகற்றி அப்புறப்படுத்தினர். சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பிறகு, இந்த சாலையில் போக்குவரத்து சீரானது.

The post கரூர் அருகே கண்டெய்னர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Read Entire Article