மதுரை, பிப். 19: சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த கோரியும். சிபிஎஸ்ஐ ரத்து செய்யக் கோரியும் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை வணிகவரி துறை அலுவலகத்தில் குணாளன் தலைமையில், வணிகவரி மதுரை கோட்ட தலைவர் மணிகண்டன், அரசு ஊழியர்கள் சங்க மாவட்tட பொருளார் கல்யாணசுந்தரம், வணிகவரித்துறை கோட்டப் பொருளார் பாபு, சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மாநில சுகாதார போக்குவரத்து துறை மண்டல பணிமனை ஊழியர்கள் சார்பாகவும் போராட்டம் நடந்தது. இதேபோல் பல்வேறு அரசுத் துறையினர் நேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
The post கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் appeared first on Dinakaran.