தேவையான பொருட்கள்
250 கிராம்கருப்பு உளுந்து
200 கிராம்பச்சரிசி
தேவையானஅளவு வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை
தேவையானஅளவு நல்லெண்ணெய்
செய்முறை:
பச்சரிசியை கழுவி காய வைத்து எடுத்துக் கொள்ளவும் தோல் உளுந்தை பொன்னிரமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.அதனை மிக்ஸி ஜாரில் போட்டு இரண்டையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்.பிறகு அரைத்து வைத்த அந்த மாவிலிருந்து தேவையான அளவு மாவை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும் பிறகு அதே பவுலில் இரண்டரை மடங்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.அந்த தண்ணீரை ஒரு கனமான பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அடுப்பில் வைக்க வேண்டும் மிதமான சூடு வந்தவுடன் மாவை சிறிது சிறிதாக தண்ணீரில் கலந்து கொள்ளவும். அதனுடன் மாவை கைவிடாமல் கலக்கிக் கொள்ளவும் அதை நன்றாக கொதித்து வேகவிடவும்.பத்து நிமிடத்தில் அது கெட்டியான பதத்தில் வந்துவிடும் அதனை தண்ணீரில் கையை நனைத்துவிட்டு மாவின் மீது வைத்து தொட்டுப் பார்த்தால் கையில் ஒட்டாமல் இருக்கும் இறக்கிக் கொள்ளவும்.அதை ஒரு தட்டில் வைத்து கையை வைத்து நடுவில் ஒரு கு லியாக செய்துகொள்ளவும் அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு வெல்லத்தை வைக்கவும்.இப்போது சூடான சுவையான சத்து மிகுந்த கருப்பு உளுந்தங்களி தயார்.
The post கருப்பு உளுந்தங்களி appeared first on Dinakaran.