கம்பி கட்டும் இயந்திரம் திருடிய தொழிலாளி கைது

6 months ago 18

தர்மபுரி, நவ.14: தர்மபுரி மாவட்டம், கடகத்தூர் பகுதியை சேர்ந்த தனராஜ்(42), சென்ட்ரிங் காண்ட்ராக்டர். இவர் அதியமான்கோட்டை அருகே உள்ள ஒட்டப்பட்டியில், மருத்துவமனை கட்டும் பணியை காண்ட்ராக்ட் எடுத்து செய்து வருகிறார். நேற்று முன்தினம், அங்கு வைக்கப்பட்டிருந்த கம்பி கட்டும் 2 இயந்திரம், டைல்ஸ் கட்டர், மரம் கட்டர் ஆகிய இயந்திரங்கள் திருட்டு போனது. இதுகுறித்து தனராஜ் அதியமான்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், ஏ.செட்டிஅள்ளி பகுதியை சேர்ந்த சலூன்கடை நடத்தி வரும் முனியன் (36) என்பவர், இயந்திரங்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கம்பி கட்டும் இயந்திரம் திருடிய தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Read Entire Article