குமுளி: கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல்போக பாசனத்துக்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் இன்று (ஜூன் 1) தண்ணீரை திறந்து வைத்தார்.
முல்லைப் பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் இரு போக சாகுபடி நடைபெற்று வருகிறது. முதல் போகத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் தேதியில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு போதிய மழையின்றி நீர்மட்டமும் குறைந்தது. இந்நிலையில் தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கியது. இதனால் நீர்வரத்து அதிகரித்து அணை நீர்மட்டமும் 130.50 அடியாக உயர்ந்தது.