கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே சுங்கான்கடை பகுதியில் மேற்குதொடர்ச்சி மலை உள்ளது. இந்த மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இந்த சூழலில், மலையின் அடிவாரத்தில் அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரி அமைந்துள்ளது. காட்டுத்தீயும் மலை அடிவாரப்பகுதியை நோக்கி பரவி வருகிறது. காற்று அதிகமாக வீசிவருவதாலும் காட்டுத்தீ குழுந்துவிட்டு எரிந்து வருகிறது.
தற்போது நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் கல்லூரி ஊழியர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காற்றின் வேகம் காரணமாக காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவருவது சிரமமாக உள்ளது. இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்கும் வகையில் கல்லூரிக்கு 2நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
The post கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ: கல்லூரிக்கு விடுமுறை appeared first on Dinakaran.