கனிமவள கொள்ளை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு: எம்.எல்.ஏ. தகுதி நீக்கம்

1 month ago 7

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கங்காவதி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ஜனார்தன ரெட்டி. இவர் கனிமவள கொள்ளையில் ஈடுபட்டதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இரும்புதாது கனிம வளத்தை கொள்ளையடித்ததாக பதியப்பட்ட வழக்கு விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதனிடையே, இந்த வழக்கில் எம்.எல்.ஏ. ஜனார்தன ரெட்டி குற்றவாளி என்று கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. குற்றவாளி ஜனார்தன ரெட்டிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கனிமவள கொள்ளை வழக்கில் ஜனார்தனர் எட்டி குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில அவரின் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து கங்காவதி தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article