கனமழை எச்சரிக்கை கலெக்டர்களுக்கு அரசு அறிவுறுத்தல்

2 months ago 10

சென்னை: கனமழை எச்சரிக்கையை அடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இந்த மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில், “கனமழை எச்சரிக்கையை அடுத்து சூழ்நிலையை சரியான முறையில் கையாள்வதற்கு மாவட்டம் முழுவதும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தயார்படுத்த வேண்டும். அனைத்து துறைகளுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கனமழை எச்சரிக்கை கலெக்டர்களுக்கு அரசு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article