கட்டிட மேஸ்திரி வழுக்கி விழுந்து பலி

2 weeks ago 3

தர்மபுரி, ஏப்.27:தர்மபுரி அடுத்த கிருஷ்ணாபுரம் குட்டப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் (42), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி சந்திரலேகா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் இயற்கை உபாதைக்காக அந்த பகுதியில் உள்ள ஏரிக்கரை அருகே நாகராஜ் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் ஏரிக்கரையில் வழுக்கி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவரது 2கால்களும் செயல்படாமல் போனது. இதையடுத்து சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பினார். நேற்று முன்தினம், அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர், அவரை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post கட்டிட மேஸ்திரி வழுக்கி விழுந்து பலி appeared first on Dinakaran.

Read Entire Article