ஸ்ரீவில்லிபுத்தூர்: கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் சிறை தண்டனை விதிக்கும் தமிழக அரசின் மசோதாவை மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் வரவேற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், விருதுநகர் மாவட்டம், வில்லிபுத்தூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தனியார் நிதி நிறுவனங்கள் சுய உதவி குழுக்களுக்கு கடனை கொடுத்துவிட்டு, அதை கட்டாயப்படுத்தி வசூலிக்கின்றனர். பெண்கள், குடும்பத்தினரை தகாத முறையில் நடத்துகின்றனர். இவர்களின் நிர்பந்தத்தால் ஏராளமான தற்கொலைகள் நடைபெறுகின்றன.
கடன் வசூல் என்ற பெயரில் அத்துமீறி நடந்துகொள்ளும் நிறுவனங்கள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும் என வற்புறுத்தி வந்தோம். கட்டாய கடன் வசூல் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டப் பேரவையில் புதிய மசோதாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். இந்த சட்டத்தை மனப்பூர்வமாக வரவேற்கிறோம். இதில் பல திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்தை தவிர்க்க உரிய பாதுகாப்பு அம்சங்களை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு ெதரிவித்தார்.
The post கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் சிறை தண்டனை; தமிழக அரசின் மசோதாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. வரவேற்பு appeared first on Dinakaran.