கட்சியெல்லாம் அப்புறம் தான்... காசு இருந்தா கரை ஏறிக்கோ! - புதுச்சேரியில் தேர்தலுக்காக முளைக்கும் அரசியல் கோஷ்டிகள்

4 months ago 15

யாருக்கும் எந்தக் கட்சியும் நிரந்தரம் இல்லை என்பதுதான் புதுச்சேரி அரசியல் களத்தின் கடந்த கால வரலாறு. அதன்படி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலைக் கணக்குப் போட்டு இங்கே ஆளாளுக்கு தனி அணி திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். புதுச்​சேரி​யில் கூட்டணி ஆட்சி நடத்​தும் என்.ஆர்​.​காங்​கிரசுக்​கும் பாஜக​-வுக்​கும் நீண்ட நாட்​களாகவே சுமுகமான உறவு இல்லை.

அமைச்சர் பதவி, வாரியத் தலைவர் பதவிகள் கிடைக்காத பாஜக எம்எல்​ஏ-க்கள் டெல்​லிக்கே சென்று முதல்வர் ரங்க​சாமி மீது புகார் வாசித்து​விட்டு வந்தார்​கள். இதையெல்​லாம் பார்த்து​விட்டு, “பாஜக வேண்​டாம்​ணே... தனித்தே நிற்​போம்” என என்.ஆர்​.​காங்​கிரஸ் காரர்​களும் முதல்வர் ரங்க​சாமிக்கு தூபம் போட்டுக் கொண்​டிருக்​கிறார்​கள்.

Read Entire Article