அரூர், பிப்.16: அரூர் கடைவீதியில் எப்போதும் வாகன நெரிசல் காணப்படும். குறிப்பாக காலை 8 மணி முதல் 9.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையும், சாலையில் நடந்து செல்ல வழியில்லாத வகையில் பள்ளி பஸ்கள், டூவீலர்களின் நெரிசல் அதிகமாக காணப்படும். அத்துடன் கடைவீதி, மஜீத் தெரு, பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டிருப்பதுடன், கடைகளின் முன்பு வாகனங்களும் நிறுத்தப்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், கடைவீதி சாலையை ஒருவழி பாதையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கடைவீதி சாலையை ஒருவழி பாதையாக மாற்ற நடவடிக்கை appeared first on Dinakaran.