
பாட்னா,
பீகார் மாநிலம் சீதாமரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பெட்டிக்கடை உள்ளது. அந்த பெட்டிக்கடையில் நேற்று சிறுவர்கள் 5 பேர் மிட்டாய் வாங்க சென்றுள்ளனர்.
அப்போது, கடைக்காரர் வேறு பொருளை எடுக்க திரும்பியபோது சிறுவர்கள் கடையில் இருந்த மிட்டாய்களை திருடியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கடைக்காரர் 5 சிறுவர்களையும் தாக்கியுள்ளார்.
மேலும், அந்த கடைக்காரர் தனது மகன் மற்றும் கிராமத்தினர் சிலருடன் சேர்ந்து 5 சிறுவர்களின் ஆடைகளை கலைந்து நிர்வாணப்படுத்தியுள்ளார். பின்னர், செருப்பு மாலை அணிவித்து, சுண்ணாம்பு பூசி சிறுவர்களை நிர்வாணமாக கிராம சுற்றிவர வைத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கடைக்காரர் உள்பட 3 பேரை இதுவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.