சென்னை: இந்திய கடலோர காவல்படையில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களுக்கும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன என்று ஓய்வு பெற்ற கடலோர காவல்படை அதிகாரி கமாண்டன்ட் நா.சோமசுந்தரம் தெரிவித்தார். ராணுவ விஞ்ஞானி வி.டில்லி பாபு, சென்னை வியாசர்பாடி மல்லிகைப்பூ காலனியில் உள்ள தனது இல்லத்தில் ‘கலாம் சபா’ நூலகம் மற்றும் வழிகாட்டி மையத்தை நடத்தி வருகிறார்.
வடசென்னை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில், பள்ளி மாணவர்கள் மேற்படிப்பு வாய்ப்புகளை அறிந்து கொள்ளவும், கல்லூரி மாணவர்கள் வேலை வாய்ப்புகள், போட்டித் தேர்வுகள் பற்றிய புரிதல்களை பெறவும் பல்துறை வல்லுநர்கள் பங்கேற்கும் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.