கடலூர், விழுப்புரத்தில் மின் சீரமைப்பு பணிக்கு புதுகையில் இருந்து 34 பேர் புறப்பட்டு சென்றனர்

3 months ago 8

புதுக்கோட்டை, டிச.2: புதுக்கோட்டை புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மின் சீரமைப்புப் பணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மின் பணியாளர்கள் 34 பேர் நேற்று புறப்பட்டுச் சென்றுள்ளனர். பெஞ்சல் புயலால் சென்னை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் ஏராளமான மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது. எனவே அங்கு ஏற்பட்டுள்ள மின் பாதிப்புகளை சீரமைப்பதற்காக புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தலைமையில் 17 பணியாளர்கள் லாரியில் நேற்று புறப்பட்டுச் சென்றனர். இதேபோல, விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மின் பாதிப்புகளை சீரமைப்பதற்காக ஆலங்குடி மின்வாரிய அலுவலகத்தில் இருந்து உதவி பொறியாளர் ஞானசேகரன் தலைமையில் 17 பேர் புறப்பட்டு சென்றுள்ளனர்.

The post கடலூர், விழுப்புரத்தில் மின் சீரமைப்பு பணிக்கு புதுகையில் இருந்து 34 பேர் புறப்பட்டு சென்றனர் appeared first on Dinakaran.

Read Entire Article