கடலூர் ரயில் விபத்துக்கு மாவட்ட நிர்வாகம்தான் காரணமா? - முதல்வர் பதிலளிக்க பாஜக வலியுறுத்தல்

6 hours ago 2

சென்னை: செம்மங்குப்பம் ரயில்வே கேட் விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த கொடூரத்துக்கு முழுக்க கடலூர் மாவட்ட நிர்வாகம் தான் காரணம் என்ற ரீதியிலான ரயில்வே துறையின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் என்று பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் செம்மங்குப்பம் கிராமத்தில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது, விழுப்புரம் - மயிலாடுதுறை பேசஞ்சர் ரயில் மோதியதில் மூன்று அப்பாவி பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தையும் கடும் வலியையும் ஏற்படுத்துகிறது. இன்று காலை 7.45 மணிக்கு இந்த கொடூரம் நடந்துள்ளது.

Read Entire Article