கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம்புரண்டு விபத்து

2 months ago 9

சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் நேற்று திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து, விசாரணை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து ஆவடியை நோக்கி நேற்று காலை 11:00 மணியளவில் மின்சார ரயில் புறப்பட்டது. இதில், 200-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்த ரயில் புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களில், திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ரயில் இன்ஜினில் இருந்து 9-வது பெட்டியின் 4 சக்கரங்கள் ரயில் பாதையை விட்டு இறங்கின.

Read Entire Article