சென்னை: மத்திய அரசு நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ள கடனுக்கான வட்டியை 8 சதவீதமாக குறைக்க வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற எரிசக்தி துறை அமைச்சர்கள் மாநாட்டில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தி உள்ளார்.
மத்திய மின்துறை அமைச்சர் மனோகர் லால் தலைமையில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தி துறை அமைச்சர்கள் மாநாடு புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: